அரசு மேல்நிலை பள்ளி - “திடீர் ஆய்வு”
Posted on 19/03/2022
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர் மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் இடை நின்ற மாணவர்கள் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு பாதியில் பள்ளியை விட்டு நின்ற மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிப்படிப்பைத் தொடர அறிவுரை வழங்குமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
Tags: News