ஒரே வீட்டில் 22 ஆயிரம் மதுபாட்டில்கள் - டாஸ்மாக் ஊழியர்கள் ஷாக்!

ஒரே வீட்டில் 22 ஆயிரம் மதுபாட்டில்கள் - டாஸ்மாக் ஊழியர்கள் ஷாக்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக ஓசூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானப்பள்ளி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, சின்ன மலசோனை சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு பண்டல் பண்டலாக கர்நாடக மாநில மதுபாட்டில்கள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது அவற்றின் மதிப்பு சுமார் 10 லட்சம் என்பதும், எண்ணிக்கையில் 22 ஆயிரம் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு போலீசார் கண்டகாணபள்ளியை சேர்ந்த சங்கர் (50), ஒசட்டி பகுதியை சேர்ந்த ராஜண்ணா (62) ஆகிய இருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.
 
தேன்கனிக்கோட்டையில் பேட்ராய சுவாமி தேர்திருவிழா நடைபெற உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவே இந்த மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனவே வேறு எங்கேனும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? எவ்வளவு நாளாக இந்த தொழில் நடந்து வருகிறது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஒரே வீட்டில் 22 ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் கிருஷ்ணகிரி மக்கள் மட்டுமின்றி டாஸ்மாக் ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top