7 பேர் கொண்ட மருத்துவ குழு "ஐஸ்வர்யம் அறக்கட்டளை"
Posted on 21/12/2016
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு உதவுவ தும் அவர்கள் பால் அன்பு செல்லுத்துவதும் இறைவ னைக்கே செய்யும் தொண்டு. அதிலும் மக்களின் ஆரோக் கியத்தை கவனித்து அவர் களுக்கு சுகமான வாழ்வளிக் கும் சேவை மருத்துவர் களேயே சாரும்.
இது ஒருபுறம் இருக்க ஏழ்மையில் பிறந்து ஏழ்மை யில் வளர்ந்து தன்னுடைய இறுதி நாட்களையும் ஏழ்மை யிலேயே வலியுடன் எதிர் கொள்கிறார்கள். இன்னும் சில வீடுகளில் ஏழ்மையி னால் மருத்துவ உதவி ஏதும் பெறமுடியாமல் வீட்டி லேயே தங்களின் இறுதி நாட் களை எதிர்நோக்கி குடும்பத் திற்கு சுமைப் போலவும் கருதப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையை மாற்றி பற் பல தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கும் போதிலும், தென் தமிழகத்தில் முதன் முறை யான 7 பேர் கொண்ட மருத் துவக் குழு சேவையை மட் டுமே முன் நிறுத்தி களமிறங் கியுள்ளது. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டு மென்கிற நோக்கத்தோடு, கிராமப்புறங்களிலும், ஆதரவற்றோர் மற்றும் முதி யோர் இல்லங்களில் இலவச மருத்துவ முகாம்கள் என தொடங்கி இன்று ஐஸ்வர்யம் அறக்கட்டளை என்கிற ஒன்றை நிறுவி, பின் ஆதர வில்லாமல் தம்முடைய இறுதி நாட்களை எதிர் நோக்கி கொண்டிருப்பவர் களை கடச்சனேந்தல் பகுதி யில் நேத்ராவதி வலி நிவார ணம் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு மையத்திற்கு கொண்டு சென்று அவர்களு க்கு தங்களின் சொந்த செல விலேயே சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பொது மருத்துவ துறைச் சார்த்த மருத்துவர் பாலகுரு சாமி, அமுத நிலவன், மணி கண்டன், வித்யா மஞ்சுநாத், அறுவை சிகிச்சை நிபுணர் அருண் குமார், பிசியோ தெரப்பிஸ்ட் ரம்யா, பயோ டெக் இன்ஜீனியர் செந்தில் குமார் ஆகியோர் இந்த அறக் கட்டளையின் முக்கிய தூண் களாக செயல்பட்டு வருகின் றனர். இவர்களின் சேவை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஐஸ்வர்யம் அறக் கட்டளையின் நிர்வாகி மருத் துவர் பாலகுருசாமி அவர் களிடம் கேட்டபொழுது:
‘சின்னதாக ஒரு தலை வலியோ அல்லது காய்ச் சலோ வந்துவிட்டால் போதும் கவனித்துக்கொள்ள யாரும் இருக்க மாட்டார் களா? என்கிற ஒரு எண்ணம் இயல்பாகவே நமக்கு தோன் றும். ஆனால் யாருடைய ஆதரவுமே இல்லாதவர்கள் எண்ண செய்வார்கள்? ஏதோ தலைவலி, காய்ச்சல் என்பது அதிகபட்சம் ஒரிரு தினங்களில் சரியாகிவிடும். ஆனால் தீர்க்க முடியாத நோய்களான புற்றுநோய், பக்கவாதம், மூச்சுக்கோளாறு போன்ற நோய்கள் வந்தால் அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? இந்த கேள் விகளை மட்டுமே விதையாக விதைத்து இந்த அறக்கட் டளையை துவங்கினோம்.
இன்று அது வேறூன்றி மரமாக வளர்ந்து கிளை விட தொடங்கியுள்ளது. பல மருத் துவர்களும் பொது மக்களும் இன்று தாமாக முன்வந்து எங் களுடன் இணைந்து உதவிக் கரம் கொடுக்கிறார்கள். மக்களுக்கு சேவைப் புரியவேண்டுமென்பதற்காக மருத்துவப் பணியில் இணைந்தோம். என்னுடைய குழுவில் உள்ள மற்ற மருத் துவர்களும் நானும் ஒன்றாக படித்தவர்கள். எங்களுக்குள் நல்லதொரு புரிதல் இருந் தது. எனவே, எங்களின் பணி நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கிராம ங்களுக்கும், ஆதரவற்ற முதி யோர் இல்லங்களுக்கும் சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வந் தோம். அப்படி நாங்கள் செல் லும் போது ஆதரவற்ற இல்ல ங்களிலும், சாலையோரங் களிலும், ஏழ்மை நிறைந்த வீடுகளில் மருத்துவ உதவி பெற முடியாமல் படுத்தபடுக் கையாக இருப்பவர்களை சந்திக்க தொடங்கினோம்.
அவர்களில் பெரும்பா லானோர் தங்கள் நோயில் இறுதி கட்ட நிலையில் வலி யோடு வாழ்பவர்கள். எனவே அவர்களுக்கு எங்க ளால் இயன்ற சில சிகிச்சை களை அளிக்க திட்டமிட்டு, அவர்களின் இறுதி நாட்கள் அமைதியாக இருக்க வேண் டுமென கடச்சனேந்தல் பகுதி யில் நேத்ராவதி வலி நிவார ணம் பராமரிப்பு மற்றும் மறு வாழ்வு மையம் என்னும் ஒன்றை துவங்கினோம். 20 படுக்கை கொண்ட அந்த மையத்தில் தற்போது 18 பேர் உள்ளனர்.
ஆதரவற்ற முதியவர் களுக்கு இலவச மருந்துகள் மற்றும் சிகிச்சையை எங் களின் சொந்த செலவில் செய்வதோடு, பொருளாதார சூழ்நிலை மற்றும் அடிப் படை வசதி குறைவான மக் களுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறோம். இந்த மையத்தில் 24 மணி நேர மருத்துவ வசதிக் கொண்ட செவிலியர்கள், மருத்துவர்கள், உதவியாளர் கள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற் படுத்தியுள்ளோம். இதில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதோடு, உள் நோயாளிக்கு இலவச உண வும் வழங்குகிறோம்.
தற்போது எங்களின் சேவையைக் கண்டு எங் களின் அறக்கட்டளைக்கு விளாச்சேரி பகுதியில் பெரிய நிலப்பரப்பு ஒன்றை நன்கொடையாக வழங்கி யுள்ளார். அங்கு விரைவில் ஆதரவற்ற அடித் தட்டு ஏழை மக்கள் பயன்பெறும் வகை யில் ஒரு கட்டிட மும், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் அறிவு குறைப் பாடு டைய குழந்தை களுக்கான “Neuro Rehabilitation Centre” ஒன் றையும் அங்கே நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் உருவாக்கவுள்ளோம்.’ என கூறினார்.
மேலும் விபரங்களுக்கு: 9894042747
Tags: News, Art and Culture, Academy