வீட்டிற்கு வாஸ்து பார்த்தால் மட்டும் போதுமா?

வீட்டிற்கு வாஸ்து பார்த்தால் மட்டும் போதுமா?

வீடு அல்லது கட்டிடங்களை கட்டுவதற்கு வாஸ்து பார்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே நாம் கட்டும் கட்டிடத்தின் நிலத்தின்கீழ் உள்ள ஜியோபதிக் ஸ்ட்ரெஸின் தாக்கம் பற்றியும் அறிந்து கொள்வது முக்கியம். வாஸ்து என்பது பூமியின் மேற்பரப்பில் உள்ள நீரோட்டத்தை வைத்து கணிக்கப்படுவது. அதன்மூலம் எது எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டுமென்பதை கணிக்க முடியும். ஆனால், அவ்விடத்தில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் தாக்கம் இருக்கிறதா என்பதை பார்த்தபின்தான் வாஸ்து விற்கே செல்ல வேண்டும் என்கிறார் பிரபல Dr.A.மீனாட்சி M.B.B.S., D.G.O.

ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் என்பது பூமிக்கு அடியில் இயற்கையாக நிகழும் மாற்றங்களால் ஏற்படும் எதிர்மறையான அதிர்வுகள். இதற்கு பூமிக்கு அடியில் உள்ள நீரோட்டம், தாதுப் பொருட்கள் மற்றும் பூமியின் மின்காந்த அலைகள் தான் முக்கிய காரணம். இந்த தீயஅதிர்வுகள் கீழிருந்துமேல் எழும்பி பூமியின் மேற்பரப்பில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் அதிர்வுகளாக வெளிப்படுகின்றன. ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்கள் நாம் குடியிருக்கும் வீடு அல்லது தொழில்புரியும் இடங்களில் அமைந்திருந்தால் அவை பாதிப்புக்கு உள்ளாகி நம் வாழ்வையும் பாதிக்கிறது.

நம் வீடு அல்லது கட்டிடம் அமைந்துள்ள பூமிக்கு அடியில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் கோடுகள் ஒன்றோடுஒன்று சேரும் இடம் ‘நொட்கள்’ என்றழைக்கப்படும். அதாவது முடிச்சுக்கள். இந்த முடிச்சுக்களில்தான் அதிகப்படியாக எதிர்மறை சக்தி வெளியாகும். இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் செடி, கொடிகள் சரியாக வளராது. வீட்டின் சுவற்றில் விரிசல்கள் போன்றவை ஏற்படும். மேலும், ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்ஸின் தாக்கம் அதிகமாக உள்ள இடத்தில் நாம் பல மணித்தியாலங்கள் செலவிடும்போது அந்த எதிர்மறை சக்திகளினால் உறக்கமின்மை, குழந்தையின்மை, வியாபாரத்தில் நஷ்டம், குடும்ப உறவில் பிரச்சினை, விபத்து, புற்றுநோய் போன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்வை பாதிக்கிறது.

பூமியின் கீழ் பகுதியில் மின்காந்த அதிர்வுகள் இருப்பது போல, நம்முடைய உடலிலும் மின்காந்த அதிர்வுகள் இருக்கின்றன. அவற்றை நாம் ‘ஆரா’ என்று அழைக்கிறோம். எனவே, நாம் வசிக்கும் இடத்தில் நேர் மறையான அதிர்வுகள் இருந்தால், அவை நம்முடைய உடலில் உள்ள அதிர்வுகளோடு இணைந்து நமக்கு நன்மையும், உடலில் ஆரோக்கியமும் அளிக்கிறது. ஆனால், ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் போன்ற எதிர்மறையான அதிர்வுகள் இருந்தால், அது நமக்கு உடலில் பல பாதிப்புகளையும் குடும்பத்தில் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

நாம் வாழும் வீடுகளில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் இருக்கின்றதா என்பதை பிரத்தியேகமான எனர்ஜி ஸ்கேனர்கள் கொண்டு கண்டறியலாம். அதன் பின்னர் அந்தக்கோடு சேரும் இடங்களில் அனுபவம் மிகுந்த வல்லுனர்களைக் கொண்டு ஜியோபதிக் கம்பிகளைப் பொருத்தி சரிசெய்யலாம். இதனை சாதாரணமானவர்களால் நிவர்த்தி செய்ய முடியாது.

ஜியோபதிக் ஸ்ட்ரெஸ் ஒரு இடத்தில் இருக்கிறதா என்பதை அறிய நாங்கள் பிரத்தியேகமான எனர்ஜி ஸ்கேனர்களை வைத்திருக்கின்றோம். யாராவது அவர்களின் வீட்டில் இதுபோன்ற பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வீட்டின் வரைபடம் மற்றும் நிலத்தடி நீரை மட்டும் கொண்டு வந்தாலே போதுமானது. நாங்கள் அந்த நீரை ஸ்கேனரில் ஆராயும்பொழுது அதில் ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்ஸின் தடம் தென்பட்டால், அந்த வீட்டிற்கு நாங்கள் சென்று, ஜியோபதிக் கம்பி என்ற ஒன்றினைப் பொருத்துவோம். இது மந்திரமோ அல்லது மாந்திரீகமோ இல்லை. இது முழுக்க முழுக்க அறிவியல். பொருத்தப்பட்ட அந்தக் கம்பி நேர்மறையான அதிர்வுகளை வெளிப்படுத்தி, ஜியோபதிக் ஸ்ட்ரெஸ்ஸின் எதிர்மறை அதிர்வுகளைத் தடுத்து, அந்த பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழிசெய்கிறது. வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு வளமான வாழ்வு பெற உங்கள் வீட்டையும் பரிசோதித்து தீர்வு காணுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9845533655, 8754557755

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top