ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில 59வது குடியரசு தின தடகளப்போட்டி துவக்கவிழா

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் மாநில 59வது குடியரசு தின தடகளப்போட்டி துவக்கவிழா

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில்,  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில்  விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும் 59வது மாநில குடியரசு தின 3 நாள்  தடகளப்போட்டிகளுக்கான  துவக்கவிழா பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர்  சா. கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.
அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவர்கள் விளையாட்டு துறைக்கு மட்டும்  10 கோடி ஒதுக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையால்  தேசிய அளவில்  விருதுநகர் மாவட்டம்  5வது இடமுமஇ; தடகளப்போட்டியில்  விருதுநகர் மாவட்டம்  2வது இடமும் பெற்று சிறந்து விளங்குகிறது.
மேலும்,  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  தமிழக முதல்வர்  அலுவலகத்திற்கு அழைத்து  பணமுடிப்பு வழங்குவதும்,  மிகவும்  பாராட்டுதற்குரியது என்று கூறினார்.
விருதுநகர் மாவட்ட பள்ளி முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் எ. புகழேந்தி  அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் சிறப்புரையாற்றுகையில்:
விருதுநகர் மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சார்பில்  நடைபெறும்  பயிற்சிகள் விளையாட்டு மைதானப்பராமரிப்பு போன்ற ஏற்பாடுகள் பற்றி பேசினார்.
கலசலிங்கம் பல்கலைகத்தின் இயக்குநர் முனைவர் எஸ். சசிஆனந்த்  வாழ்த்துரை வழங்கி  பேசுகையில்,  பள்ளிகளில் படிக்கும்பொழுது மாநில  மற்றும் தேசிய  விளையாட்டுப்போட்டிகளில்  சாதனை புரிந்தவர்களுக்கு  கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில்  படிப்பதற்கு  100 விழுக்காடு  படிப்புக்கட்டணமும்,  விடுதிக்கட்டணமும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.  மேலும்,  விளையாட்டில்  சாதனை புரிந்தால் மேற்படிப்பு,  கல்லூரி படிப்பு,  வேலைவாய்ப்பு தரும் கம்பெனிகள்  அரசுசார் வேலைகள்,  தனியார் கம்பெனி வேலைகள் அனைத்திற்கும்  இடஒதுக்கீடு உள்ளன. எனவே  மாணவர்கள்  விளையாட்டுத்துறையில்  சாதனைபுரிவது அவசியம் என்று கூறினார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி . ராஜேந்திர பாலாஜி  தேசியக் கொடி  ஏற்றி,  ஒலிம்பிக் தீபம் ஏற்றி,  மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வெண்புறாக்களை பறக்கவிட்டு தடகளப்போட்டிகளை துவக்கி வைத்தார்.
அமைச்சர் பேசுகையில்,  தமிழ் மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம்  சிறந்து விளங்குவதால் விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 59வது குடியரசு தின மாநில விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும்.
மேலும்,  இந்த 3 நாள் போட்டிகளில் மொத்தம் 17 வகையான தடகளப்போட்டிகள்  நடைபெறுகின்றன.
மொத்தம்  3000 க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ,  மாணவிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் இங்கு வருகை தந்து இந்த விளையாட்டுத் துறையில்  பங்கு பெற,  இங்கேயே தங்கும் வசதி,  வௌ;வேறு விளையாட்டுத்திடல்கள் அமைந்திருக்கும்  கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்  இந்த  மாபெரும் மாநில விளையாட்டுப் போட்டிகள்  நடைபெறுவது  மிகவும் பாராட்டிற்குரியது என்று கூறினார்
மேலும், தமிழக முதல்வர்  அவர்கள்  24000 கோடிக்கு அதிகமாக  பள்ளிக்குழந்தைகள்  கல்வித்தரம்  விளையாட்டுத்தரம் உயர்வதற்கு ஒதுக்கி புத்தகம்,   பை, சைக்கிள், உணவு, கணித வளைவு வரைவு பெட்டி, மடிக்கணினி  மற்றும் பலவற்றை விலையில்லா பொருளாக வழங்கி, மாணவர்கள் தொய்வின்றி படித்து  விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குவதால் இன்று தமிழகம்  இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார்.
மேலும்,  பல்கலை  இயக்குநர் கூறியது போல  விளையாட்டில்; சாதனை புரிந்தவர்களுக்கு  கல்லூரி,  தனியார் கம்பெனி,   அரசு கம்பெனி,   அரசு வேலைகள்  போன்றவற்றில் எல்லாம் இடஒதுக்கீடு தருவதால் விளையாட்டு  சாதனை வீரர்களுக்கு  சென்ற இடமெல்லாம்  சிறப்பு  என்று கூறினார்.
பின்பு  விளையாட்டு மைதானம் ஒன்றில்  முதல் விளையாட்டாக 19 வயதிற்குட்பட்ட 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர்களிடம்  கைகுலுக்கி,   வாழ்த்தி,    கொடியசைத்து  துவக்கிவைத்தார்..
மேலும்,  சாத்தூர்   சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஜி. சுப்பிரமணியன்,  ஸ்ரீவி. சட்டமன்ற உறுப்பினர் எம். சந்திரபிரபா,  மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துக்குமரன்   கலசலிங்கம் பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன்,   பல்கலை மாணவர் சேர்க்கை அதிகாரி  லிங்கசாமி, டீன்  முனைவர் ஸ்ரீகுமார், ஆராய்ச்சியாளர் நாசானின்,   பாராளுமன்ற உறுப்பினர்கள்,  பஞ்சாயித்து அதிகாரிகள்,  ஊர் முக்கிய பிரமுகர்கள்,  பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,  உடற்கல்வி இயக்குநர்கள்,  மற்றும்  மாணவ,  மாணவிகள்,  பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
உடற்கல்வி ஆய்வாளர் சி. ஜெயக்குமார்,  ராஜக்குமார்  பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள்,  தலைமையாசிரியர்  டி. என்.  இராமசாமி  தலைமையில்  பல குழுக்கள் அமைத்து  விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top