ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. பட்டியல் ரெடி

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. பட்டியல் ரெடி

சென்னை: தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றும் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழக முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு, நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்டுகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பூரணமாக குணம் அடைந்து விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அப்போலோ நிர்வாகம் அறிவித்து. அதுவரை தமிழக அரசு நிர்வாகத்தை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைப்பெற்று வருகிறார். இதனிடையே பல்வேறு துறைகளின் ஆய்வுக்கூட்டங்களை சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ். இந்த கூட்டங்களில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கலந்துகொண்டுள்ளார். கூட்டங்களில் கேள்வி கேட்பதும் உத்தரவிடுவதும் ராமமோகனராவ் தான். இந்த சூழலில், ராவும் பன்னீர்செல்வமும் ஆலோசித்து 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றும் பட்டியலை தயாரித்துள்ளனர். இந்த பட்டியல் அப்பல்லோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒப்புதலுக்கு அனுமதி அளித்தால் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிய வருகிறது.
 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top