கோல்டன் லோட்டஸ் நடத்திய வாடிக்கையாளர் சந்திப்பு தினம்!
Posted on 01/12/2016
மதுரை மூன்றுமாவடியில் அமைந்துள்ள கோல்டன் லோட்டஸ் நிறுவனத்தார், தம்முடைய நிறைவேற்றப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமான அப்பார்ட்மெண்ட் (அடுக்குமாடி வீடுகளை) வாடிக்கையாளர்கள் நேரில் வந்து பார்த்து திருப்தியடைந்து கொள்முதல் ஏற்பாடுகளை செய்வதற்காக "வாடிக்கையாளர் சந்திப்பு தினம்" என்ற ஒன்றை கடந்த 27.11.2016-ம் தேதி அப்பார்ட்மெண்ட் வளாகத்திலேயே காலை 11.00 மணிக்கு நடத்தினார்கள்.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளர்கள் கோல்டன் லோட்டஸ் வளாகத்திற்கு வருகை தந்து அடுக்குமாடி வீடுகளை பார்வையிட்டு அவற்றின் அமைப்புகள், விலைகள், வசதிகள், கடன் வசதிகள் முதலிய அனைத்தையும் கேட்டறிந்தனர். அடுக்குமாடி வீடுகளுக்கான அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக பூர்த்தி செய்துள்ள கோல்டன் லோட்டஸ் வீடுகள் மிக விரைவிலேயே பெருமளவில் விற்று தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: News, Madurai News