புஷ்பா - 2 படத்தில் நடிக்கவில்லை - விஜய் சேதுபதி!
Posted on 16/08/2022

அல்லு அர்ஜீனா? ஷாருக்கானா? என்ற நிலையில் ஷாருக்கானுக்கு வில்லனாகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
அல்லு அர்ஜீன், ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதியிடம் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக பேசப்பட்டது. ஆனால், அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த வேடத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்தார்.
இந்நிலையில் இப்போது புஷ்பா-2 வில் வேறொரு கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டது. அது வில்லன் வேடம் என சொல்லப்படுகிறது. இதில் அவருக்கு மனைவியாக பிரியாமணி நடிப்பார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டது. இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என இயக்குனர் அட்லீ கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து கால்ஷீட் பிரச்சனையால் , ஜவான் அல்லது புஷ்பா-2 என இரண்டில் ஏதாவது ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்திருக்கிறார். இதனையடுத்து ஷாருக்கானே விஜய் சேதுபதியிடம் பேசி, ஜவானில் நடிக்க கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தனது கால்ஷீட்டை ஜவான் படத்துக்கு விஜய் சேதுபதி கொடுத்து விட்டார். இதனால் புஷ்பா-2 ல் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
Tags: News, Hero